:
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

"வெடிகுண்டு” மிரட்டல் வழக்கில் ஆக்‌ஷன்....சுற்றி வளைக்கப்படும் சீமான்.. மீண்டும் ஈரோடு போலீசார் சம்மன்!!!..

வீடு முற்றுகைக்கு 300 பேர் கூட வரலையே என கிண்டலடித்த சீமான்- 870 பெரியாரிஸ்டுகள் மீது போலீஸ் வழக்கு!!!

எந்த வைக்கம் நகருக்குள் நுழையக்கூடாது என பெரியார் தடுக்கப்பட்டாரோ அதே இடத்தில்.. ஸ்டாலின் பெருமிதம்!

ஆதவ் அர்ஜுனாவிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.. ஆனால் அவர் கேட்கவில்லை.. திருமாவளவன் !!!

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற..துரோக கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்ட..அழைப்பு விடுக்கிறார் டிடிவி!!!

ஜெயலலிதா மீது அவதூறு பேச்சு! முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி.ராஜன் மீதான வழக்கு ரத்து !!!

2 குழந்தைங்க தனியா இருப்பாங்க.. ரிமாண்ட் செய்த நீதிபதி.. ஜாமீன் கேட்டு மீண்டும் கோர்ட் போன கஸ்தூரி!!!

மீண்டும் சர்ச்சை கிளப்பும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..! Work – life balanceஇல் நம்பிக்கை இல்லை..!

அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக, ரூ.400 கோடி ஊழல்..அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முளைத்த சிக்கல்!!!

திட்டத்தை நிறைவேற்றியது திமுக.. பாராட்டு விழா எடப்பாடி பழனிசாமிக்கா?: துரைமுருகன்

பாஜக கூட்டணி வென்றால் மகாராஷ்டிரா முதல்வர் இவர் தானா?....ஷிண்டேவுக்கு கல்தா?.... அமித்ஷா ட்விஸ்ட்!!!....

சவுக்கு சங்கர் மீது கஞ்சா பதுக்கியதாக வழக்கு.. மதுரை கோர்ட்டில் 25ம் தேதி தீர்ப்பு !!!..

விஜய்யுடன் கூட்டணியா? “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்..” என சாடிய திருமாவளவன்!!!

கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் கண்ணீர் விட்டு கதறியழுத அமெரிக்க பெண்- அதிர்ச்சியில் பொதுமக்கள்!

விஜய் கட்சியுடன் கூட்டணி? 2026 தேர்தல் தொடர்பாக அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் பரபர ஆலோசனை!!!

"ஒரே நாடு ஒரே தேர்தல்" திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்! தவெக விஜயை வலியுறுத்தும் வானதி சீனிவாசன் !!!

காங்கிரஸா இப்படி?..திமுக கூட்டணியில் வெடித்த தீபாவளி.. ரசிக்காத ஸ்டாலின்.. விஜய் கொளுத்திய பட்டாசு !!!.....

தமிழக வெற்றிக் கழகம் இன்னொரு திராவிட கட்சி கிடையாது!!!....ஆனால்..கொள்கை அதேதான்...

வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.. 11 மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவு!!!

இதய வாசலை திறந்து காத்திருக்கிறேன்.. தவெக மாநாட்டுக்கு முன் விஜய் வெளியிட்ட உணர்வுப்பூர்வ அழைப்பு !!!

உ.பி. 9 தொகுதி இடைத்தேர்தல்- ராகுல் காந்தியின் செம்ம மூவ்.. அகிலேஷ் ஹேப்பி!!!

இஸ்ரேலின் பிளானை லீக் செய்தது யார்? உலகையே உலுக்கிய அமெரிக்கா பெண்.. அரியன் தபாதாபாய்

எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி ஆரம்பம்.. டிசம்பரில் இருக்கு அதிரடி.. நாஞ்சில் கோலப்பன்!!!...

காஷ்மீரில் கொடூர தாக்குதல்! 6 பேர் கொலைக்கு பொறுப்பேற்றது லக்ஷர் முன்னணி!!!

சரவணபவன் ராஜகோபால் ஜீவஜோதி வாழ்க்கை திரைப்படமாகிறது.. மும்பை நிறுவனம் தயாரிக்கிறது..!!!

மீண்டும் மீண்டும் விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று 2 சம்பவங்கள்!!!

சென்னையில் மழை தொடர்ந்திருந்தால் திமுக அரசின் சாயம் வெளுத்திருக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!!

ஆபாச தளங்களை பார்ப்பதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல் - காவல் துறை எச்சரிக்கை!!!

“மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை!!!

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மேடையில் ஆளுநரிடம் புகார் மனு அளித்த முனைவர்!!!

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை கச்சிதமாக ‘கேட்ச்’ செய்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம்!!!

“ரயில் விபத்து குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது” - எல்.முருகன்!!!

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் வானில் 15 முறை வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் டிஎஸ்பியாக பதவி ஏற்பு: தெலங்கானா அரசு கவுரவம்! !!

“21-ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது” - ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!!!

“ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க இம்முறை பாஜக முயலாது என நம்புகிறேன்” - உமர் அப்துல்லா!!!

அதிமுக அமைப்பு செயலர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் ஏன்? - முழு பின்னணி!!!

முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஆசிய எச்ஆர்டி விருது குழு சார்பில் வழங்கப்பட்டது!!!

“காவிரி நீரை சிப்காட்டுக்கு எடுத்துச் சென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்” - இபிஎஸ்!!!

விமான சாகச நிகழ்ச்சிக்காக கூடுதல் ரயில் சேவை அளிக்காதது ஏன்? - சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்!!!

இலவச மின்சாரம் தந்தால் பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ய தயார்: அர்விந்த் கேஜ்ரிவால் சவால்!!!

வெற்றிலை, பாக்கு வைத்து மதுரை மக்களை மாநாட்டுக்கு அழைத்த விஜய்யின் தவெக கட்சியினர்!

விளையாட்டு பல்கலை. 14-வது பட்டமளிப்பு விழா: 3,638 மாணவர்களுக்கு பட்டம்!!!

“இளைஞர்களை போதைப் பொருட்களின் இருண்ட உலகத்துக்கு காங்கிரஸ் அழைத்துச் செல்கிறது” - அமித் ஷா!!!

ஊழலுக்கு மட்டுமே காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!!!

“சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்” - உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்!!!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!!!

“என் பயணத்தை சிறுமைப்படுத்தாதீர்கள்” - விவாகரத்து குறித்து பேசிய தெலங்கானா அமைச்சருக்கு சமந்தா பதிலடி!!!

முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதியை துணை முதல்வராக நியமித்ததில் தவறில்லை: முத்தரசன்!!!

“பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்” - ராமதாஸுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0-ன் தொடக்கமும் கட்சியில் தாக்கமும்!

“சட்டத்தின் ஆட்சி இருந்தால் மட்டுமே பொருளாதார, சமூக வளர்ச்சி சாத்தியம்” - குடியரசுத் தலைவர் முர்மு!!!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் - தமிழக அமைச்சரவை மாற்றம் விவரம்!!!

“வேலையில்லா திண்டாட்டமே மிகப் பெரிய பிரச்சினை!” - மோடிக்கு கேள்விகளை அடுக்கிய கார்கே!!!

ஒரு சமூகத்தின் நம்பிக்கையை அவமரியாதை செய்ய கூடாது: லட்டு விவகாரத்தில் தமிழிசை, குஷ்பு கருத்து!!!

காலில் விழுந்து ஆசி... - முதல்வர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி சந்திப்பு!!!

“பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர்தான் ஆனால் அவர் கடவுள் அல்ல” - கெஜ்ரிவால் ஆவேசம்!!!

உணவு சுற்றுலாவுக்கு பிரபலமாகும் மதுரை: உலக சுற்றுலா தினத்தில் ‘உணவு நடை’க்கு ஏற்பாடு!!!

“மரண பயம்... அழுகுரல்...” - இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பும் லெபனான் மக்களின் அனுபவம்!!!

லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன்: பிரகாஷ் ராஜுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை!!!

இந்தியாவில் ரூ.4,000 கோடியில் 31 கப்பல்கள் கட்டப்பட்டு வருவதாக ராஜ்நாத் சிங் தகவல்!!!

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பார்வை என்ன?

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: காசாவில் அமைதி திரும்ப முழு ஆதரவு அளிப்பதாக உறுதி!!!

“கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது” - திருப்பதி லட்டு விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து!!!

ஜம்மு காஷ்மீரில் கல் வீசியவர்கள், தீவிரவாதிகளை விடமாட்டோம்: தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி!!!

“அனைத்து தரப்பு மக்களையும் விஜய் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே!” - எல்.முருகன்!!!

‘‘என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்’’: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு!!!

“அரசியலில் மாணவர்களுக்கு ஆர்வம் அவசியம்” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!!!

திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம்: தேவஸ்தானம் அறிக்கை அளிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு!!!

“சமூக, சாதி மோதலை ஊக்குவிக்கும் சித்தாந்தத்தை கைவிடுவது அவசியம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

“நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை!” - ‘வேட்டையன்’ நிகழ்வில் துஷாரா விஜயன் வியப்பு!!!

துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை சூட்கேஸில் வைத்து வீசிய இளைஞர்: போலீஸில் சிக்கியது எப்படி?

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை தொடக்கம்: சென்னையில் 650 பேர் பங்கேற்பு!!!

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்: சீமான் கருத்து!!!

“2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” - தமிழிசை உறுதி!!!

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!!!

“திமுகவினரை வைத்துக்கொண்டு மது ஒழிப்பை பேசும் துணிச்சல்...” - தமிழிசைக்கு திருமாவளவன் பதில்!!!

“விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமியர்கள்தான் காப்பாற்றினார்கள்” - ‘வாழை’ வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் !!!

ஆட்சி, அதிகாரத்தில் காங்கிரஸுக்கு பங்கு: தலைமைதான் முடிவு எடுக்கும் என செல்வப்பெருந்தகை தகவல்!!!

“கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு சரிப்பட்டு வராது” - செல்லூர் ராஜூ கருத்து!!!

‘மதுவிலக்கு மாநாடு பெயரில் அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தேடுகிறார் திருமாவளவன்’ - தமிழக பாஜக!!!

“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுகிறேன்” - சீமான்!!!

“தமிழ் திரைத் துறைக்கு ‘ஹேமா கமிட்டி’ போன்ற எதுவும் தேவைப்படவில்லை” - ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

தொண்டர்களின் குரலில் உள்ள நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது: திமுக பவளவிழா மடலில் ஸ்டாலின் உறுதி!!!

“நம்முடைய கஷ்டங்களை சினிமாவுக்குள் கொண்டு வரக்கூடாது” - சசிகுமார் !!!

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் நாளை குரூப் - 2 முதல்நிலை தேர்வு: 2,327 காலியிடங்களுக்கு 8 லட்சம் பேர் போட்டி!!!

முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!!!

“அனைவரின் ஒப்புதலுடன் தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு...” - தமிழக அரசு பொறுப்புடன் பேச நிர்மலா சீதாராமன் அறிவுரை !!!

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வயநாடு பேரிடருக்கு ரூ.35 லட்சம் நிவாரணம்!!!

70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!!

பிரதமர் மோடி மீது வெறுப்பு இல்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி கருத்து!!!

தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும்: முதல்வர் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்!!!

“மகாவிஷ்ணு சொற்பொழிவு போல வேறு பள்ளிகளில் நடந்துள்ளதா?” - ஆய்வுக்கு முத்தரசன் கோரிக்கை!!!

சர்ச்சை சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யவில்லை: அசோக் நகர் அரசு பள்ளி மேலாண்மை குழு விளக்கம்!!!

‘எங்களின் சொந்தம் நீங்கள்’: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய ராஜ்நாத் சிங் அழைப்பு!!!

‘‘தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தாய்வீடாக தமிழகம் இருக்கிறது’’ - முதல்வர் உரை!!!

“எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இல்லை” - ஆர்.எஸ்.பாரதி சாடல்!!!

“மகாவிஷ்ணு பேச்சு ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு” - துரை வைகோ!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக திராவிட் மீண்டும் நியமனம்!!!

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு சர்ச்சை: நடவடிக்கையும், எதிர்வினைகளும்!

“மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை” - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!!!

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: 21 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை; மாரியப்பனுக்கு வெண்கலம்!!!

தவெக மாநாடு விருந்தினர்கள்: விஜய் - ராகுல் காந்தியின் 15 ஆண்டு ‘பந்தம்’ சலசலக்கப்படுவது ஏன்?

“சென்னையில் நாம் ஒன்றாக சைக்களில் பயணிப்போம்” - ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்!!!

ஜெர்மனியில் தமிழ் வளர்க்கும் தமிழ் இணைய கல்வி கழகம்: வெளிநாடுவாழ் தமிழர்கள் பயனடைவார்கள்!!!

“எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன” - சரத்குமார் !!!

“நெஞ்சமெல்லாம் துடிக்கிறது” - ‘வாழை’ படத்துக்கு ரஜினியின் பாராட்டும், மாரி செல்வராஜின் நன்றியும்!!!

ஐசிஐசிஐ வங்கியிடமும் ‘செபி’ தலைவர் ஊதியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!!!

“தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தவறானது” - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி !!!

“ராகுலும், விஜய்யும் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்” - செல்வப்பெருந்தகை!!!

“என் மீதான பொய்யான பாலியல் புகார்களால் நானும், குடும்பத்தாரும் நொறுங்கிப் போயுள்ளோம் - நடிகர் ஜெயசூர்யா!!!

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - எல்.முருகன்!!!

“தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு” - தமிழிசை கருத்து!!!

கவிதாவுக்கு 5 மாதத்தில் ஜாமீன் கிடைத்தது பற்றி சர்ச்சை பேச்சு: தெலங்கானா முதல்வர் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!!!

“கோழைத்தனமான செயல்” - மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளின் ராஜினாமாவை சாடிய பார்வதி!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரிய முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள்: அமைச்சர் அறிவுறுத்தல்!!!

“என் சிறுகதையில் உள்ள அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே உள்ளன” - எழுத்தாளர் சோ.தர்மன்!!!

நடிகர் விஜய் கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்ற கோரி புகார்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு!!!

பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - ‘தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு பாதிப்பு’!!!

பொதுமக்களுக்கு பெரும் சுமையாகும்; சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது: அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கம் வலியுறுத்தல்!!!

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை முற்றிலும் சேதம்!!!

“எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் திமுக அரசு” - முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பெருமிதம்!!!

“சூரி, வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல...” - இயக்குநர் பாலா!!!

‘தவெக கொடி மங்களகரமாக உள்ளது’ - தமிழிசை கருத்து!!!

தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் 19 தொழில் திட்டங்களை தொடங்கினார் முதல்வர்!!!

“என் படங்களுக்கு வன்முறை சாயம் பூசப்படுவது ஏன்?” - மாரி செல்வராஜ் ஆதங்கம்!!!

ஜெய்ப்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்டு தரமற்ற நிலையில் இருந்த 1,700 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!!!

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி: வானதி சீனிவாசன் !!!

ரேஷன் கடை ஊழியர்கள் செப்.5-ல் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம்!!!

“முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது” - அமித் ஷா பேச்சு!!!

“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை” - செல்வப்பெருந்தகை கருத்து!!!

தமிழகத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமிக்க அன்புமணி வலியுறுத்தல்!!!

இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்க பிரதமருக்கு துணை நிற்போம்: வானதி சீனிவாசன்!!!

“சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு” - கார்த்தி சிதம்பரம் !!!

“தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக” - ஆர்.பி.உதயகுமார்!!!

ஆக.15-ம் தேதி நாட்டின் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: தேசியக்கொடி ஏற்றி விருது வழங்குகிறார் முதல்வர்!!!

நாடு முழுவதும் நடந்த முதுநிலை நீட் தேர்வு: 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

“தமிழகத்தில் 2,553 மருத்துவர் இடங்களை நிரப்ப நடவடிக்கை” - மா.சுப்பிரமணியன் தகவல்!!!

''நியூசிலாந்து வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்'' - குடியரசுத் தலைவர் பெருமிதம்!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை - வழிமுறைகள் வெளியீடு!!!

“நான் தோற்றுவிட்டேன்” - மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு!!!

“கைத்தறி துறை என்பது திமுகவின் லட்சிய கொள்கை துறை” - அமைச்சர் துரைமுருகன் பேச்சு!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளருக்கே தெரியாமல் அவரின் லாக்-இன் ஐடி- யை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பெண் சார் பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட 5 பேரை அதிரடியாக கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!!!

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 69% குறைந்தது!!!

வட்டியில்லா கல்விக் கடன் வழங்க நிர்மலா சீதாராமனிடம் காங். எம்.பி விஜய் வசந்த் நேரில் கோரிக்கை!!!

கொப்பரை நிலுவை ரூ.150 கோடி: மத்திய அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராட முடிவு!!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கிறது: இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்க வாய்ப்பு!!!

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்: 32 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!!!

வயநாடு துயரம்: இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை - பினராயி விஜயன் விளக்கம்!!!

“என்னிடம் மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பெர்க்” - ட்ரம்ப் தகவல்!!!

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் இறந்த வழக்கு: சிபிஐ விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!!

‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 100 அயலக தமிழர்கள் ‘தமிழக சுற்றுப்பயணம்’ - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!!

“என் தந்தையை இழந்தபோது அடைந்த அதே துக்கம்...” - வயநாட்டில் ராகுல் காந்தி உருக்கம்!!!

யுபிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம்!!!

"இதயம் நொறுங்குகிறது" - வயநாடு நிலச்சரிவு துயரம் குறித்து சூர்யா கவலை!!!

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்ற 589 தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்!!!

வயநாடு நிலச்சரிவு.. கேரளாவில் இதுவரை ஏற்படாத பேரழிவு! உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள்.. பினராயி விஜயன்!!!

“வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தம், அச்சம்...” - கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் விவரிப்பு!!!

ஷங்கர் - ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலக 3 முக்கிய காரணங்கள்!!!

“அதிமுகவில் புதுப் பிரச்சினை உருவாக்க விரும்பவில்லை” - திருநாவுக்கரசு!!!

வாக்கு எண்ணிக்கை- 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை !!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... வெற்றி வாய்ப்பை பெற போவது யார் !!!

“முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - தினகரன்!!!

திமுகவுடன் கைகோர்த்த விஜய்... இதற்குத்தானா ? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!!!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ உலக அளவில் ரூ.100 கோடி வசூல்!!!

வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி!!!

“பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுக” - ஆந்திர முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!!!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

“மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” - ரவிக்குமார் எம்.பி!!!

பவன் கல்யாண் ஸ்டைலில் ஸ்டாலினை நேரடியாக எதிர்க்க விஜய் முடிவு!!!.....

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! ஜூலை 22ல் விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ்!!!

ஆட்சிக்கு வந்து 2 வாரம் ஆச்சு.. மோடியால் இந்த முடிவை கூட எடுக்க முடியவில்லை!!!....

ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு!!!

“தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக் கூடாதென சொல்வது தவறு!” - செல்வப்பெருந்தகை ஆவேசம் !!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: கவனம் ஈர்த்த தருணங்கள்!!!

“வாக்கு சதவீத உயர்வால் என்ன பயன்?” - தெறிக்கும் தமிழிசை நேர்காணல் | அண்ணாமலை முதல் சீமான் வரை!!!

“நாட்டுக்கு சேவையாற்ற மூன்றாவது முறையாக வாய்ப்பு” - ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிரதமர் மோடி!!!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!!!

தானே ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்!!!

‘இனி என்னவெல்லாம் செய்யமாட்டார்?’ - பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு!!!

ராணுவத்திற்கு "அக்னிவீர்" திட்டம் தேவையில்லை: என்கிறார் ராகுல்!!!

ராணுவத்திற்கு "அக்னிவீர்" திட்டம் தேவையில்லை: என்கிறார் ராகுல்!!!

மேலும், “தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது” என்று இருகட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்டியுள்ளது.!!!

"மீண்டும் மோடி ஆட்சி அமைய மக்கள் ஆர்வம்"- அனுராக் தாக்கூர் சொல்கிறார்!!!

தேனிக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கரிடம் போலீஸார் விசாரணை !!!

பா.ஜ., ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரிப்பு: அமித்ஷா பெருமிதம்!!!

5-ம் கட்ட மக்களவை தேர்தல்: மாயாவதி முதல் அம்பானி வரை வாக்களித்த பிரபலங்கள்!!!

‘‘சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ - ராமதாஸ் வலியுறுத்தல்!!!

“பாஜக தலைமையகம் வருகிறோம்; தைரியம் இருந்தால் கைது செய்வீர்” - மோடிக்கு கேஜ்ரிவால் சவால்!!!

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஜெ.பி. நட்டா!!!

அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பாங்க..காங்கிரஸ், சமாஜ்வாதி மீது மோடி திடுக் விமர்சனம்!!!

தமிழகத்தில் இருந்து 5,800 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல்!!!

வரும் கல்வியாண்டு முதல் ‘எமிஸ்’ வலைதளப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க திட்டம்!!!

கேஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சாரம்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார்!!!

வாராணசியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி பெறுவார்: அண்ணாமலை கருத்து !!!

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணம்? ஏற்பாடுகள் தீவிரம்? என்ன விசயம் தெரியுமா?

மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி 14 ஆக அதிகரிப்பு!!!

ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? - மாநிலம் முழுவதும் கோடி கணக்கில் பந்தயம்!!!

ஸ்வீடனில் உருவாகி வரும் பெரும் கோடீஸ்வரர்கள் - இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?

உலகக்கோப்பை டி20 : 2 கட்டங்களாக அமெரிக்கா செல்லும் இந்திய அணி...!!!

தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!!!

மும்பையை போராடி வென்ற லக்னோ... தரவரிசையில் 3 ஆம் இடம் பிடித்தது..!!!

விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்: காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் பேச்சு!!!

"அடுத்த ஜென்மத்தில் வங்க தாயின் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்" - பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!!!

`மோடி, ராகுல் மீதான விதிமீறல் புகார்..!' - நட்டா, கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை!!!

விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!!!

வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்ட தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு: தமிழக பாஜக வலியுறுத்தல்!!!

தங்கம் ரூ.55,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 உயர்வு!!!

“ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; சாதனை அளவை எட்ட வாக்களியுங்கள்” - பிரதமர் மோடி!!!

“ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்!” - இளைஞர்கள் வாக்களிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் அழைப்பு!!!

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்: வெற்றி கிடைக்குமா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு?

பாஜக ஆளும் உ.பி.யில் பல ஆண்டுகளாக முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலை!!!

இலங்கை கடல் பகுதியில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 10 பேர் கைது!!!

கனடாவில் காருக்குள் வைத்து இந்திய மாணவர் சுட்டுக் கொலை!!!

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கொல்கத்தாவில் கைது!!!

மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்ப்பதில் பாஜக ஆட்சி படுதோல்வி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!!

ப.சிதம்பரத்தை பேசவிடாமல் இடைமறித்த பெண்: மானாமதுரையில் கடும் வாக்குவாதம்!!!

சூரிய ஒளி மூலமாக 58 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்!!!

ஹைதராபாத்தில் உணவகம் தொடங்கினார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!!

1900- ம் ஆண்டில் வாழ்ந்த உலகின் மிகவும் வயதான மனிதர் இவர்தான் !!!

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ரோகித்தின் 13 ஆண்டு கால பயணம்!!!

மீண்டும் புதிய உச்சம்: கிராமுக்கு ரூ.7000-ஐ நெருங்கும் தங்கம் விலை!!!

“எந்த விசாரணைக்கும் தயார்; நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” - இயக்குநர் அமீர்!!!

2024 மக்களவைத் தேர்தலில் யார் எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார்கள்...12 மக்களவை தேர்தல்களிலும் நடந்தது என்ன!!!

சீனியர்கள் சித்ரவதை செய்ததால் விபரீத முடிவு: கல்லூரி மாணவர் தற்கொலையில் சிபிஐ விசாரணை!!!

“கொடுப்போருக்கும், தடுப்போருக்கும் நடக்கும் யுத்தம் இந்த தேர்தல்” - கோவை திமுக வேட்பாளர்!!!

பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு!!!

உலகின் மிக வயதான மனிதர்: வெனிசுலாவின் ஜூவான் 114 வயதில் காலமானார்!!!

தைவானில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்!!!

இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்பவர் யார்? - சசி தரூர் தரும் பதில்!!!

ராகுல் காந்தியின் கருத்து ஜனநாயகத்தின் மொழியா? - பிரதமர் மோடி விமர்சனம்!!

ஒடிசாவில் பிஜேடி கட்சியின் முக்கியத் தலைவர் வி.கே.பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றம் - பின்னணி என்ன?

பாஜக மீதான விமர்சனத்தை திசைதிருப்பிய கச்சத்தீவு... வாக்குகளாக மாறுமா!!!

இந்தியாவில் வேலையின்மை - சர்வதேச தொழிலாளர் அமைப்பு பகீர்!!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 15 நாள் காவல்! திகார் சிறையில் அடைப்பு!!!

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!!!

செல்போனில் அதிகம் ரீல்ஸ் பார்க்கக் கூடாது..சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கக்கூடாது...உடற்பயிற்சியும் ஆழ்ந்த தூக்கமும் அவசியம் -மாணவ, மாணவியருக்கு பிரதமர் மோடி அறிவுரை!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா துண்டு, துண்டாக உடைத்து விடும்...இந்தியா கூட்டணி நீடிக்காது - சீமான்!!!

மகாத்மா காந்தி நினைவு நாளை மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

இந்தியா கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து, 9வது முறையாக பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்!!!

தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை-ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம்!!!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் "நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது" - விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக 200-க்கும் அதிகமான குழந்தைகள் பலி!!!

பிரதமர் மோடியுடன் இணைந்து ரோடு ஷோவில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான்!!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி காலமானார்!!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !!!

குமரியில் தைப்பூசம் விழாவில் கலந்து கொண்ட மேயர் மகேஷ் !!!

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பக்தர்கள்!!!

65 உக்ரைன் பிணைக்கைதிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்தில் நொறுங்கியது- 65 பேரின் நிலை என்ன?

2024 குடியரசு தின அணிவகுப்பில் குழந்தை ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெறுகிறதா!!!

இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம்..காந்தியடிகள் தேசத்தந்தை அல்ல..கவர்னர் ரவியின் சர்ச்சை பேச்சு !!!

கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் 2 ஆண்டுகள் என வரம்பு நிர்ணயித்தது கனடா அரசு!!!

மதுரையில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை !!!

நாகர்கோவிலில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு பகுதிகளை மேயர் திரு.ரெ.மகேஷ் ஆய்வு..!!

நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ திட்டம்-பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு !!!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் மண்ணிற்குள் புதைந்தனர் !!!

நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

அயோத்தியில் திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் கோஷம்... பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலை !!!

சேலம் இளைஞரணி மாநாட்டில் பம்பரமாய் சுழன்ற நாகர் மாநகர மேயர் !!!

குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் காலமானார்...தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கல்..!!!

நாகர்கோவில் மேயர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்..!!!

இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் - அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு!!!

அரசியல் விளையாட்டில் திறக்கப்படும் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத கோயில் - கனிமொழி எம்.பி !!!

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பங்குத்தந்தை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் அடித்துக்கொலை..பாதிரியார் உள்பட 15 பேர் மீது வழக்கு!!!

450 ஆண்டு பாரம்பரிய காவடி பயணம்..96 ஊர்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை!!!

இரும்பு கூண்டு அறுந்து விழுந்து சிஇஓ உயிரிழப்பு...வெள்ளி விழா நிகழ்ச்சியில் நடந்த சோகம்!!!

பெங்களூருவில் ரூ.1600 கோடி செலவில் கட்டப்பட்ட போயிங் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !!!

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு !!!

திமுக இளைஞர் அணி மாநாட்டில் சுடரொளியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...1,500 டிரோன்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கண்காட்சி!!!

அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி-சத்குரு!!!

எடப்பாடி.உற்று நோக்கும் சேலம் இளைஞர் அணி மாநாடு..!!! வரும் தேர்தலுக்கு காய் நகர்த்தும் உதயநிதி..!!!

வலம்புரிவிளை குப்பை கிடங்கில்..திடீர் தீ விபத்து !!!

சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சியில் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் !!!

மணிப்பூர் பிரச்சனையை கேலோ இந்தியா மேடையில் பிரதமர் முன் நினைவுபடுத்திய முதல்வர் ஸ்டாலின் !!!

விளையாட்டுத் துறைக்குச் சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது கேலோ இந்தியா போட்டிகள் - பிரதமர் மோடி புகழாரம் !!!

வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு நடந்த கொடுமை ...திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு..காரணம் இதோ !!!

ஆதரவற்றோர்களுக்கான உறைவிடத்தை திறந்து வைத்த மேயர்..!!!

ஒழுகினசேரிஇரயில்வே பணிகள் மேயர் ஆய்வு !!!

ஏடன் வளைகுடாவில் இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்..விரைந்து உதவிய இந்திய கடற்படை!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில்கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்து விபத்து- போலீசார் விசாரணை!!!

நடிகர் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்-இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தகவல்!!!

விமான நிலையத்திற்கு இணையாக அடிப்படை வசதிகளுடன் ரூ. 100 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை துறைமுகம்!!!

அயோத்தியில் ராமர் கோவில் வருவது தவறில்லை..ஆனால் மசூதியை அதில் ராமர் கோவில் வருவது தி.மு.க விரும்பவில்லை.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்..!!!

தடுப்புச்சுவர் மீது மோதி அந்தரத்தில் தொங்கிய கேரள அரசு பேருந்து!!!

அயோத்தி ராமர் கோவிலின் கருவறை உள்ளே கிரேன் உதவியுடன் வைக்கப்பட்ட ராமர் சிலை !!!

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வரும் பிரதமர் மோடி!!!

பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்பி வரப்போறீங்களா.. உங்களுக்குத்தான் இந்த பதிவு...

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. மயோசிட்டிஸ் தொடர்ந்து வந்த புது பிர்சசனை!!!

அயோத்தி ராமர் பிரதிஷ்டை முன் அரங்கநாதரை தரிசிக்க வரும் நரேந்திர மோடி.!!! என்ன காரணம் !!!

பிக்பாஸ் சீசன் 7 ல் அர்ச்சனா விற்கு கமல் உதவினாரா ?? ஏன் கமலுக்கு இந்த வேலை..!!!

தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் வரும் 19 ம் தியதி விஜயகாந்த் ற்கு அஞ்சலி..!!

நாகாலாந்தை சென்றடைந்த ராகுல் காந்தியின் நடைபயணம் !!!

17 காளைகளை அடக்கி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்திக் முதலிடம்!!!

விஜயகாந்த் நடிக்க தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கேப்டன் இடத்துக்கு மூன்று முறை வந்து ஜெயித்த மம்முட்டி

பிரதமர் மோடியை கருவறைக்குள் நுழைய சாமியார் சிலர் எதிர்ப்பு..!!! உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!!!

ரூ.26.33 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த குஜராத் வர்த்தக மாநாடு!!!

தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு !!!

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் - சீமான் கண்டனம் !!!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் !!!

தென்காளஹஸ்தி சிவன்கோயிலில் நடைபெறும் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜை!!!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட்னர் !!!

தனது நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது- முதல்வர் ஸ்டாலின்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகளை விதித்த மாநகர காவல்துறை !!!

அதிக வசதிகளுடன் ஹுண்டாயின் புதிய ‘வெர்னா' கார் அறிமுகம்!!!

முரசு கொட்டி சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவினை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்!!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரின் செயல்பாடுகளால் தி.மு.க வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா ???

அடர் புகையை வெளியிடும் பொருட்களை எரிக்காமல் புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் -மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்!!!

இன்றும் நாளையும் சென்னை- நாகர்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்!!!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தி.மு.க. எம்பிக்கள் !!!

பொங்கலுக்கு விருந்தாக வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!!!

தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆகும் உதயநிதி ஸ்டாலின் !!!

சொந்த ஊருக்கு படையெடுத்த மக்களால் ஸ்தம்பித்த சென்னை!!!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு பூஜை செய்யும் பிரதமர் மோடி!!!

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி கிராமசபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு !!!

ஒரே மாதத்தில் ரூ.8000 உதவித்தொகை..மகிழ்ச்சியில் மக்கள்!!!

சென்னையில் இருந்து பொங்கலுக்காக 11000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் !!!

கனடாவில் திடீரென்று விமானத்தில் இருந்து குதித்த நபர்...அதிர்ச்சியில் சக பயணிகள்!!!

கன்னியாகுமரியில் ரயில்வே கேட் மீது மோதிய டெம்போ !!!

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள Google நிறுவனம்!!!

அயோத்தி ராமர் கோவில் விழா: தேசிய விழாவாக அறிவித்த அரசு ,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை !!!

25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: குஜராத் உச்சி மாநாட்டில் மோடி பேச்சு!!!

32 ஆண்டு கால மௌன விரதத்தை ராமர் கோயில் திறப்பு நாளில் முடிக்கும் மூதாட்டி -பின்னணி இதோ!!!

4 வயது மகனைக் கொலை செய்து பையில் அடைத்த பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி -மடக்கி பிடித்த போலீசார்!!!

அர்ஜுனா விருது வென்ற முஹமது ஷமி ...நீண்ட நாள் கனவு என்று உருக்கம்!!!

26 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் முக்கிய நிறுவனங்கள் ...வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு-முதல்வர் !!!

மீண்டும் தென்மாவட்டங்களை மூழ்கடிக்க போகும் கனமழை...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!

நாகர்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ்!!!

பொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் சிக்கல்...தோல்வியில் முடிந்த போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சு வார்த்தை...நாளை திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்!!!

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்...தமிழ்நாட்டில் வரும் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள்!!!

சென்னையை விடாது துரத்தும் கனமழை ..அலர்ட் கொடுக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜாண்!!!

கனிமொழி எம்.பியின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!!

தமிழ்நாட்டில் குவியப்போகும் வேலை வாய்ப்புகள்...முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் ..விறுவிறுப்பாக தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாடு!!!

சூரிய பயணத்தில் சாதனை படைத்த இந்தியா !!! பாராட்டிய பிரதர் மோடி !!!

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் புதிய 48 வாகனங்களை துவக்கி வைத்தார்..!!!

இந்திய கடற்படையினர் சாதுர்யமாக செயல்பட்டு மீட்ட சோமாலியாவில் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் !!!

பொங்கல் பரிசு ரூ.1000 கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல்? யாருக்கு கிடைக்கும் பொங்கல் பரிசு ?

முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேனின் கடைசி திக் ! திக் ! நிமிடங்கள்!!!!

நயன்தாராவிற்கு பிறந்த நாள் சப்பிரைஸ் ஆக ரூ. 3.5 கோடி செலவில் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்!!!

`த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்..!' - மன்சூர் அலிகானை எச்சரித்த நீதிமன்றம்

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!!!

எஸ். ஜே . சூர்யாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்!!!

அக்டோபர் 16 வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தை விதைத்த நாள்...!!!

தளபதி 68 ல் விஜய்யோடு ஆக்ரோஷமாக மோதும் வில்லன் மோகன்...!!!

மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று மதுரையில் விஜய் போஸ்டர்!!!

கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கி வாழ்த்திய கிருத்திகா உதயநிதி!!

சீமான் விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாதர் சங்கம்..ஏன் சின்மயி ..கவிதா புகாரை கையில் எடுக்கவில்லை..இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கண்டனம்..!!!

விஜய்யுடன் கூட்டணியா? “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்..” என சாடிய திருமாவளவன்!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கைகள் பல சமீபக காலமாக பேசுபொருளாகியுள்ளன. இந்நிலையில் விஜய் உடன் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்க இருப்பதை பலர் விமர்சிக்கின்றனர் என்றும், இதை நம்பவ வேண்டாம் எனவும் விசிக தொண்டர்களுக்கு விளக்கமளித்த திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

மது ஒழிப்பு எனும் விமர்சனத்தை திமுகவுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்திருந்த நிலையில், திருமாவளவன் திடீரென மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்து ஷாக் கொடுத்தார். மட்டுமல்லாது இதில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்திருந்தார். திமுக கூட்டணியில் இருந்துக்கொண்டு இப்படி செய்வது ரொம்ப தப்புங்க என உடன் பிறப்புகள் கொந்தளித்தனர். பின்னர் இந்த பிரச்னை ஒரு வழியாக தீர்த்து வைக்கப்பட்டது.


ஆனால், தற்போது மற்றொரு பிரச்னை வெடித்திருக்கிறது. அதாவது தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில், “கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்று விஜய் அறிவித்திருந்தார். இது ஏற்கெனவே விசிகாவின் கோரிக்கையாக இருந்தது. இப்படி இருக்கையில் விஜய் உடன் புத்தக வெளியீட்டு நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்பதாக தகவல்கள் பரவின. இந்த தகவல் உண்மைதான். ஆனால், இந்த நிகழ்வு தவெக-விசிக இடையே கூட்டணியை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. இது திருமாவுக்கு புதிய தலைவலியை உருவாக்கிய நிலையில், விளக்கமளித்து தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், “என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்! அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம்.

இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுக'வைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம். இவர்களில் கட்சி அடையாளமில்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளனர். இவர்கள் கடந்த 2019 நாளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கெதிராக நம்மைச் சீண்டியும் தூண்டியும் வருகின்றனர்.


அவற்றுக்குப் பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கிவருகிறோம். கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம். "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி" என்பது திமுக - விசிக உட்பட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஒரு 'கூட்டமைப்பாகும்'. 2017-இல் அது காவிரி நீர் உரிமைக்கான ஒரு போராட்டக் களத்தில் கருக்கொண்டது. அது அடுத்தடுத்து பல்வேறு போராட்டக் களங்களைச் சந்தித்தது. அவற்றினூடாக அதுவே ஒரு 'தேர்தல் கூட்டணி' யாகவும் பரிணாமம் பெற்று, தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. 2019, 2021, 2024 பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது.

இதனை கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள இயலும்? 2026-இல் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான். அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் கையாளும் உத்திகளுள் ஒன்றுதான், திமுகவுக்கும் திமுக கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கும் இடையில் கொம்புசீவும் முயற்சியாகும். அத்தகைய முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திமுக - விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் குரலெழுப்புகிறபோதெல்லாம் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூர்தீட்டுவதில் அதிவேகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அத்தகைய சதிச் செயல்களுக்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக, "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டையொட்டி, பரந்த பார்வையோடு பொதுநல நோக்கோடு, "அதிமுகவும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமே" என நாம் கூறியதை, ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நமது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எவ்வளவு வேகமாக களத்தில் இறங்கினர் என்பதை நாடறியும். அதனை நாம் மிக இலாவகமாக முறியடித்தோம். அடுத்து, "ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு" என்னும் நமது கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைபாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்தனர். 'முதன்முதலாக, புத்தம் புதிதாக இப்போது தான் நாம் இதனைப் பேசுகிறோம்' என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதுவும் ' எதிர்வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திட்டமிட்டே ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குகிறோம்'- என வேண்டுமென்றே உண்மை நிலையைத் திரித்து, நம்மை திமுகவுக்கு எதிராக நிறுத்தி உரசலை உருவாக்கிட பெரும்பாடுபட்டனர். அதனையும் மெல்ல நீர்த்துப்போகச் செய்தோம்.

தற்போது, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் அவர்களோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர். அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார். நடிகர் விஜய் அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசியுள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும். இதனையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நமது கொள்கைப் பகைவர்கள் மற்றும் அரசியல் களப் போட்டியாளர்கள் எனப் பலரும் பல்வேறு வகையிலான ஊக வாதங்களையும் கற்பனா வாதங்களையும் மனம்போன போக்கில் மானாவாரியாக இட்டுக்கட்டி அள்ளி இறைத்தனர்.


இந்நிலையில்தான், அதற்கு எதிர்வினையாக நம் தரப்பு கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டோம். எனவே, விஜய் அவர்களின் உரை குறித்து நமது நிலைப்பாடுகளை விவரிக்க நேர்ந்தது. அவரது உரையை நாம் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், "வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்கைள" எப்படி நாம் கடந்துபோவது? அவர்களுக்கு விடை சொல்லவேண்டும் என்பதைவிட, என் உயிரின் உயிராய் எனக்குள் இயங்கும் உங்களுக்கு நமது கட்சியின் நிலை குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டியது தவிர்க்க இயலாத தேவையாகிறது. ஆகவே தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன், திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் கொண்டிருக்கிற அரசியல் உறவு தொடர்பாக விளக்கிட வேண்டிய நெருக்கடி எழுந்தது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்குண்டு. அதாவது, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். அதனைச் சிதறடிப்பதற்கோ சிதைப்பதற்கோ நாம் எவ்வாறு இடமளிக்க இயலும்? இதனையே அண்மையில் அறிக்கையாகவும் வெளியிட்டோம். தொலைக்காட்சி ஒன்றிலும் ஆங்கில நாளேடு ஒன்றிலும் நேர்காணல் அளித்து நமது நிலைபாட்டை வெளிப்படுத்தினோம்.




அதாவது, ஏற்கனவே நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதனை நிறுவிய ஓர் உறுப்பியக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. எனவே, நமக்கு அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதையும் அவ்வறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம். எனினும், மீண்டும் அவர்கள் நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர். திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளன்று "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர். "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும் தொகுப்பினை 'விகடன் பதிப்பகமும்' 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் வியூக நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளன. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (விஓசி) என்பது நமது கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் அவர்களின் நிறுவனமாகும்.

இத்தொகுப்புக்கான அரும்பணிகளைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விகடன் பதிப்பகம் மேற்கொண்டு வருகிறது. 36 பேர்களின் கட்டுரைகளைப் பெற்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளனர். எனது விரிவான ஒரு நேர்காணலும் அதில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆனந்த விகடன் இதழைச் சார்ந்த சிலர் புது தில்லிக்கு வந்து, எனது நேர்காணலை குரல்பதிவு செய்துகொண்டனர். பின்னர் அவற்றை எழுத்தாக்கி இத்தொகுப்பில் இடம்பெற செய்துள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கரின் மைந்தர் யஷ்வந்த் அம்பேத்கர் அவர்களுடைய மகன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் தங்கையின் கணவர், இடதுசாரி சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டே கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. நமது கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ரவிக்குமார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு 36 பேரின் கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.



இந்தநூல் கடந்த ஏப்ரலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வெளியிடுவதாக தான் பதிப்பகத்தார் திட்டமிட்டனர். அப்போதே இந்த நூலின் வெளியீட்டு விழா குறித்தும் பேசினர். அதில் நானும் பங்கேற்க வேண்டுமென்றும் கோரினர். முறைப்படி இசைவுகோரி மடல் எழுதுவோம் என்றும் கூறினர். எனவே, அப்போதே நான் அதில் பங்கேற்க இசைவளித்துவிட்டேன். அந்நிகழ்வில் பங்கேறகுமாறு தமிழ்நாடு முதலமைச்சரும் நமது கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, இந்து ராம், ஆனந்த் டெல்டும்டே போன்றோரை அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது தெரிவித்தனர். குறிப்பாக, நமது முதலமைச்சர் வெளியிட தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அதன்படி, ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் தோழர் கலைச்செல்வன் அவர்கள், விகடன் பதிப்பகத்தின் பொது மேலாளர் அப்பாஸ் அலி கையொப்பமிட்ட அழைப்புக் கடிதம் ஒன்றை அக்டோபர்-10 அன்று எனக்கு அளித்தார். அப்போது நடிகர் விஜய் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார். அப்போதைய சூழலில் நடிகர் விஜய் அவர்களின் கட்சி மாநாடு (அக்- 27) நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் அவர்களின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாளேடு ஒன்று "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது". இந்த நூல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றியது என்பதால் அவரது பிறந்தநாளான ஏப்ரல் -14 அல்லது அவரது நினைவு நாளான திசம்பர்-06 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் வெளியிடுவதென தீர்மானிப்பது இயல்பான ஒன்றேயாகும். அதன்படியே, தற்போது திசம்பர் -06 அன்று இந்நிகழ்வை நடத்திட ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கட்சி சார்பற்ற விகடன் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது திட்டமிட்ட சூது! சனாதன சூழ்ச்சி! உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை நிலைகுலைய வைக்கும் சதிநிறைந்த முயற்சி! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது? மக்கள்நலன் மற்றும் நாட்டுநலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தொலைநோக்கோடு திமுக உள்ளிட்ட தோழமைகளோடு கைகோர்த்து நாமே உருவாக்கிய "மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி" ஆகியவற்றை நாம் ஏன் சிதறடிக்க வேண்டும்? இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும்.




மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்? இவ்வாறு நம்மைப் பற்றி இழித்தும் குறைத்தும் மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் கையாளும் அளவுகோள் தான் என்ன? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா? திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும். குழப்பம் தேவையில்லை. "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு! அதனை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம்!


https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *